தமிழ்

லோகம்மாள்

லோகம்மாள்

சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும் பகலும் அதை ஆயிரக்கணக்கான முறை ஜபித்து அம்மந்திர பலத்தாலேயே தன் உடல் முழுதும் எரிவது போன்ற வெப்ப உணர்வு தோன்றும் அவருக்கு.

பகவான் ரமணரின் புகைப்படத்தை லோகம்மா திருமங்கலதிதிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் கண்டார். இந்தப் பெண்மணி திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுள்ளவர். ஆனால் லோகம்மாளின் உறவினர் அவரை இவ்வம்மையாருடன் செல்ல அனுமதிக்கவில்லை.

தென்காசிக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கையில் யாரோ ஸ்வாமி சமாதியானதைச் சொல்லக் கேட்டு லோகம்மா பீறிடும் ஒரு கேவலை வெளியிட்டுப் பின் அமைதியாகி விட்டார். பின் பகவான் தன் முன் கையில் கைத்தடியும் கமண்டலமும் ஏந்திக் காட்சி தந்ததைக் கூறினார். அந்தக் காட்சி எவ்வளவு தத்ரூபமாய், நிஜம் போல நிகழ்ந்ததென்றால் லோகம்மா சுவாமி சமாதியானார் என்ற சேதி சொன்னவரைப் பார்த்து “பகவான் ரமணர் நம் முன்னால் நின்று கொண்டிருக்கையில் எவ்வாறய்யா நீ கூறலாம் இப்படியெல்லாம்?” என்று கடிந்து கொண்டார். இந்தக் குழப்பம் பின்னாளில் தீர்ந்தது. சமாதியானது சேஷாத்ரி ஸ்வாமிகள், பகவான் ரமணரில்லை என்பது. இருப்பினும் லோகம்மாவிற்கு பகவானை நேரடியாக தரிசிக்கும் சமயம் அப்போது வாய்த்திருக்கவில்லை.

பின்னாளில் தன் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட சமயத்தில் லோகம்மாள் ராமேஸ்வரத்திற்குப் பயணமானார். தன் கைம்பெண் வாழ்க்கையை இனித் தாள முடியாதென்று கடலில் பாய்ந்து உயிர்விடத் தீர்மானித்து, தன் முடிவை செயலாற்ற எத்தனிக்கையில் அவருக்கு “திருப்பதியிலிருந்து வரும் யாத்திரிகர்களுடன் திருவண்ணாமலை செல்ல வேண்டுமென்றும் அவர்தம் கனவு நனவாகும்” என்றும் ஒரு குரல் கேட்டது.

வெகு சீக்கிரத்திலேயே லோகம்மாள் பகவானின் பாதங்களையடைந்தார். அப்போது பகவான் அவர்தம் அருட்பார்வையால் லோகம்மாளை சுமார் பத்து நிமிடங்களுக்கு இடைவிடாமல் நோக்கினார். லோகம்மாள் பலமுறை தன் விழிகளை பலவந்தமாய் மூடிக் கொள்ளுமளவிற்கு ஒரு ஒளி அவர் கண்களில் தெரிந்தது. என் கண்கள் முழுதும் கண்ணீரால் நிரம்ப, நான் பகவானை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.” எதற்காக இத்துணை நாளும் ஏங்கினாரோ அதை ஒரு சில நொடிகளில் அருளிவிட்டார் பகவான். லோகம்மாளின் வாழ்க்கை அத்தோடு முழுவதுமாய் மாறிவிட்டது.

(பகவானின் கண்களை உற்று நோக்குங்கள். அதிலுண்டாகும் மாற்றம் கண்டு அதிசயித்துப் போவீர்கள்.)

இச்சமயங்களில் லோகம்மாள் ஆஸ்ரமத்து சமையலறையில் தங்கி சேவை செய்து வந்தார். வீடு திரும்பும் வேளையில் பகவான் அவருக்கு “உபதேச மஞ்சரி”  தந்தருளினார். பின்னாளில் லோகம்மாள் ஆஸ்ரமம் வந்து மாதக்கணக்கில் தங்குவார், அச்சமயங்களிலெல்லாம் பகவான் அவருக்கு ஆன்மிக வழிகாட்டியாயிருந்தார்.

~ நன்றி – ரமணாஸ்ரமம் | சரணாகதி | The Mountain Path

  • Anonymous

    Wonderful.. This is an eye opener for the so called "architects" of the society who issue fatwa on widows..I remember a story of Kanchi Paramacharya when the followers of EVR shouted against God opposite Kanchi Mutt when all others except Paramacharya started chasing them and the Paramacharya asking the "thiests" to find out whether the "athiests" went or not if not gone call them so as to check how his mind reacts on hearing their slogans.. Real saints are real society reformers..

Performance Optimization WordPress Plugins by W3 EDGE